மேகத்தையும்
நிலவையும்
தென்றலையும்
வழக்கம் போல
துணைக்கு அழைத்தேன்
உன்னை நினைக்கும் மனதிற்கு
ஆறுதல் தர வேண்டி
என் கவிதையின் வரிகளில்
வந்து விளையாடி
என்னவனுக்கு என் மனதை
கூறி விடு என்று

காதல் இல்லாத
இதயத்தை இறைவன்
எனக்கு படைத்திருந்தால்
கவலை இல்லாமல்
வாழ்ந்திருப்பேன் இந்த பூமியில்
என் இதயத்தை
சிறைபிடித்த வெண்பனிநிலவே
உன்னை நான் காதலித்தது
இறைவன் செய்த தவறா????
என் இதயம் செய்த தவறா????
இதயம் இல்லாத
மனிதன் ஒருவன்
அபூர்வமாக பிறந்தாலும்
சகியே
உன் அழகை கண்டால்
கண்டிப்பாக காதலிப்பான்
கண்ணீரில் நான் எழுதும்
கவிதை யாவும்
கண்ணா உன் பேர் மட்டும்
தான் சொல்லும்.
கன்னி என் எண்ணம் யாவும்
நீ மட்டும் தான் என்றும்.
கனவில் உன்னோடு
நான் வாழும் காலம் யாவும்
கலைந்தோடும் மேகமாய்
ஆகிப் போமோ ?
கலங்கிய உளமது கேட்கிறது
வாய் திறந்து சொல்ல நீ
வாராயோ விரைந்து…
வானவில்லின் ஜாலங்கள் யாவும்
வஞ்சி என் மனதுள் கண்டேன்
வற்றாத நீரோடையாய் நிந்தன்
வரவு காணும் கணங்களில்
மழைச் சாரல் தூவும் நேரம்
மண் சிலிர்க்கும்..
உன் புன் சிரிப்பின் சாரத்திலே
காரிகை என் உள்ளம் களிக்கும்..
பால் நிலவு பொழியும் நேரம்
மங்கை என்னுள் உந்தன் ராகம்…
மடைதிறந்த வெள்ளமாய்
மங்கை விழியில் கண்ணீர்க் கோலம் …
தென்றல் தாலாட்டும் நேரம்
தெம்மாங்காய் இசைக்கிறாய் என்னுள்ளே
தேம்பி நான் அழவென்றே
நெடுந்தூரம் நீ உள்ளாய்..
தேவனே உன் எண்ணம் என்னுள்ளே எப்போதும்….
உனக்காய் என் இதயம்
உயிர் வாழும் என்றுமே – காதல்
உரைக்காது நீ போனால்
தரிக்காது மறு நிமிடமே…
காத்திருப்பில் பலன் உண்டா
காதலா நான் கேட்கிறேன்…
தடையுடைத்து வருவாயா
தாரமாக எனைக் கொள்வாயா…
தவறிடில் தவறிடும் என் மூச்சன்றோ.
கண்ணீரில் நான் எழுதும் கவிதை யாவும் கண்ணா உன் பேர் மட்டும் தான் சொல்லும். கன்னி என் எண்ணம் யாவும் நீ மட்டும் தான் என்றும். கனவில் உன்னோடு நான் வாழும் காலம் யாவும் கலைந்தோடும் மேகமாய் ஆகிப் போமோ ? கலங்கிய உளமது கேட்கிறது வாய் திறந்து சொல்ல நீ வாராயோ விரைந்து… வானவில்லின் ஜாலங்கள் யாவும் வஞ்சி என் மனதுள் கண்டேன் வற்றாத நீரோடையாய் நிந்தன் வரவு காணும் கணங்களில் மழைச் சாரல் தூவும் நேரம் மண் சிலிர்க்கும்.. உன் புன் சிரிப்பின் சாரத்திலே காரிகை என் உள்ளம் களிக்கும்.. பால் நிலவு பொழியும் நேரம் மங்கை என்னுள் உந்தன் ராகம்… மடைதிறந்த வெள்ளமாய் மங்கை விழியில் கண்ணீர்க் கோலம் … தென்றல் தாலாட்டும் நேரம் தெம்மாங்காய் இசைக்கிறாய் என்னுள்ளே தேம்பி நான் அழவென்றே நெடுந்தூரம் நீ உள்ளாய்.. தேவனே உன் எண்ணம் என்னுள்ளே எப்போதும்…. உனக்காய் என் இதயம் உயிர் வாழும் என்றுமே – காதல் உரைக்காது நீ போனால் தரிக்காது மறு நிமிடமே… காத்திருப்பில் பலன் உண்டா காதலா நான் கேட்கிறேன்… தடையுடைத்து வருவாயா தாரமாக எனைக் கொள்வாயா… தவறிடில் தவறிடும் என் மூச்சன்றோ.

மனமே மறுக்காதே
என்னை
உனக்குள் கட்டி வைத்து அறுக்காதே ..
பட்டு பாவாடையில்
பழமுதிர்சோலையாய்
… வரும் உன்னை பார்த்தால்
என் தாகமெல்லாம்
திக்கு முக்காடுதே ..
என் நெஞ்சில் ஊறிடும்
வெண்மதி
நிலவே ..
பெண்மை பேசிடும்
முழுமதி
கனவே ..
நான் உன்னை நேசிக்க
என்ன செய்ய வேண்டும்….?
நீ வரும் வழி சாலையில் நடந்தேன்
உன் நிழல் என பூமியில் கிடந்தேன்
புதிது புதிதாய்
புருவ பாசை
உன்னிடம் அறிந்தேன் ..
நம் காதல் முழுவதும்
காதலர் தினமே ..
அதை கொண்டாடும் பொழுதிலே
சரித்திரம் அழைக்கும்..!
.நட்பே ..
என்னை சுற்றி
கருஞ்சிறுத்தைகளாய் எத்தனை
பிரச்சினைகள் வந்தாலும்
நீ இருக்கும் ஞாபகத்தில்
தைரியமாக சென்றுவிடுகிறேன்….
கவிக்கொரு கம்பன்
அந்த கம்பனுக்கும் இருப்பான் ஒரு நண்பன்..
தீப்பொறி பட்ட பட்டாசாய்
… நீ பேசும் வெளிப்படையான பேச்சுக்கள்
நம்மை விலகாது காக்கும்..
நமக்கென விதிகள் இல்லாத முறையில்
ஒன்று மட்டும் நமக்கு வேண்டும்..
சோதனைகள் நூறு இருக்கும்
வேதனைகள் ஆயிரம் இருக்கும்
அந்த நேரத்தில் நீ கொடுக்கும்
போதனைகள் மட்டும் போதும்…
♥ ♥ உன்னை பார்க்கும் போது தான்
கண்கள் இருப்பதை உணர்ந்தேன்
அதே போல
உன்னை காணாத போது தான்
அதில் உள்ள கண்ணீரையும் உணர்ந்தேன் ..
விழியோரம் கசியும் கண்ணீர் துளிகள்
உணர்வுகள் மட்டும் அல்ல
உள்ளத்தையும் மௌனமாக்கி விடும்
பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்போம்
பிரிவுகளை மட்டுமே ….
நினைவுகளை அல்ல … ♥ ♥